கோரவிபத்தில் தாயும் மகனும் பலி.

விபத்தில் தாயும், மகனும் உயிரிழப்பு – வாகன சாரதி தப்பியோட்டம்

அநுராதபுரம் – பாதெனிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் 32 வயதான தாய் மற்றும் மூன்றரை வயதான அவரது மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

பாதெனிய – பலல்ல பகுதியில் கெப் வாகனமொன்றில் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து தொடர்பில் கெப் வண்டியில் பயணித்த 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் குறித்த கெப் வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் கெப் வண்டி சாரதி மற்றும் மேலும் இருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.