பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி சந்தைகளில் எவருக்கும் கொரோனாத் தொற்றில்லை!

பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி சந்தைகளில் எவருக்கும் கொரோனாத் தொற்றில்லை! – கேதீஸ்வரன் அறிவிப்பு

மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியின் தொடராக யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளின் வியாபாரிகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை சந்தைகளின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளும் வெளியாகியுள்ளன.

நீர்கொழும்பில் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், முடிவுகள் நேற்று வெளியாகின எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த மூன்று சந்தைகளில் எவருக்கும் தொற்றில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.