தெற்குப் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? திங்கள் முடிவு என்கிறார் பீரிஸ்.

தெற்குப் பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்?
திங்கள் முடிவு என்கிறார் பீரிஸ்

மேல் மாகாணப் பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளைத் தான் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார் எனவும் அவர் கூறினார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.