கொழும்பில் தொற்று 15,624 ஆக அதிகரிப்பு.

கொழும்பில் தொற்று 15,624 ஆக அதிகரிப்பு.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியில் இருந்து நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 624 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 259 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.