முதியோர் இல்லத்தில் ஒருவர் உயிரிழப்பு, பல பேருக்குத் கொரோனாத் தொற்று உறுதி.

முதியோர் இல்லத்தில் ஒருவர் உயிரிழப்பு. 45 பேருக்குத் கொரோனாத் தொற்று உறுதி

கொழும்பு, மோதர பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் 45 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அண்மையில் இந்த முதியோர் இல்லத்தில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளில் கொரோனாத் தொற்றுள்ளமை இனங்காணப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் 98 பேருக்கு பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், அவர்களில் 45 பேருக்குக்  கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.