களுத்துறை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் பிடிக்குள் 55 கர்ப்பிணிப் பெண்கள் இலக்கு! 

களுத்துறை மாவட்டத்தில்
கொரோனா வைரஸின் பிடிக்குள்
55 கர்ப்பிணிப் பெண்கள் இலக்கு! 

கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை மூலம் களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 55 கர்ப்பிணிப்  பெண்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இந்தத் தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் களுத்துறை மாவட்டத்தில் வேமாகப் பரவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் மேற்படி சங்கம், மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால் மாவட்டத்துக்குள்ளேயே உப கொத்தணிகள் உருவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 448 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 164 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.