முல்லைத்தீவில் சோகம்! வவுனிக்குளத்தில் பாய்ந்தது கப் வாகனம்!! – தந்தை, மகள் மாயம்; மகன் பலி

முல்லைத்தீவு, மல்லாவியிலுள்ள வவுனிக்குளம் வாவியில் கப் வாகனமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தையும், மகளும் காணாமல்போயுள்ளனர். மகன் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

37 வயதான வாகன சாரதியான தந்தையும், 2 வயது குழந்தையான மகளும் காணாமல்போயுள்ளனர்.

நீரில் மூழ்கிய 12 வயதான சிறுவனான மகன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

கப் வாகனத்திலிருந்த மற்றுமொரு சிறுவனான மகன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

காணாமல்போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மல்லாவி – செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் கப் வாகனம் வாவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது எனத் தெரியவந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.