மருதனார்மடம் கொத்தணி 90 ஆக உயர்வு! மேலும் இருவருக்குத் தொற்று உறுதி.

மருதனார்மடம் கொத்தணி 90 ஆக உயர்வு! மேலும் இருவருக்குத் தொற்று உறுதி.

யாழ். மருதனார்மடம் கொத்தணியில் இன்று மேலும் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக பரிசோதனைக் கூடத்தில் இன்று 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொத்தணியில் மொத்தமாகத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.