சித்ரா நல்லவர் இல்லை : சித்ரா மேல் அடுக்கடுக்காக பழி போடும் மாமனார்

சித்ராவின் தற்கொலைக்கு அவரது வருங்கால கணவரான ஹேமந்த் காரணம் எனக்கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஹேமந்த் தந்தையான ரவிச்சந்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சித்ராவை பற்றி புதிய மனு  ஒன்றில் அடுக்கடுக்காக பல குற்றங்களை சாட்டியுள்ளார்.

சித்ராவிற்கு முன்பே மூன்று பேரை காதல் செய்து திருமணம் வரைக்கும் சென்றதாகவும் பின்பு ஏதோ ஒரு சில காரணங்களால் நின்றதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் சித்ராவிற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும், பிரபல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திருவான்மியூரில் கோடிக்கணக்கில் மதிப்புள்ள வீடு, ஆடி கார் வாங்குவதற்கு தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் காரணமாக இருக்கலாம் மீதமுள்ள தொகையை தான் மாத தவணையில் அவர் செலுத்தி வருவதாக தெரிவுத்துள்ளார்.

சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கு அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பண உதவி செய்துள்ளதாகவும் அவர் அந்த மனுவில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

vj chitra

இப்படி சித்ராவின் மாமனார் அடுக்கடுக்கான பழிகளை போட்டுள்ளது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மகனை காப்பாற்றுவதற்காக அவர் கொடுத்துள்ள இந்த புகாரை காவல்துறை நியாயமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.