தேசியமட்டத்திற்கு தெரிவான வீர வீராங்கனைகள்,பயிற்றுவிப்பாளர்கள் கௌரவிப்பு!

தேசியமட்டத்திற்கு தெரிவான வீர வீராங்கனைகள் அவர்தம் பயிற்றுவிப்பாளர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2020ம் ஆண்டு மாகாண மட்ட போட்டிகளின் ஊடாக தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவான வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் உபகரணங்கள் வழங்கியும் அவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(23) காலை 10.00மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீர வீராங்கனைகளுக்கான குறித்த விளையாட்டு உபகரணத் தொகுதிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ் வீர வீராங்கனைகளை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களான செ.நந்தகுமார்(யூடோ மற்றும் யரசர), கா.நாகேந்திரன்(குத்துச்சண்டை), எஸ்.விஜயராஜ் (கராத்தே), எஸ். றஜிதரன் (கராத்தே), பிதீபன்(பளுதூக்கல்), றாகவன் (வொலிபோல்) ஆகியோர் உபகரணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி அரசாங்க அதிபர், விளையாட்டு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.