U-19 ரக்பி போட்டியிலிருந்து பீட்டர்ஸ் விலகல் – ரக்பி சமூகத்தில் அதிர்ச்சி

கொழும்பு St. Peter’s College, நடப்பில் உள்ள இளையோர் 19 வயதிற்குட்பட்ட Dialog ரக்பி நாக்அவுட் போட்டி (2025 ஜனாதிபதி கோப்பை) இலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதம், இலங்கை பாடசாலை ரக்பி சங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கல்லூரி தலைவர் வணபிதா ரோஹித்த ரொட்ரிகோ கையெழுத்திட்ட அந்தக் கடிதத்தில்,
சில மாணவர்களுக்கு எதிராக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“நாங்கள் நமது மதிப்புகளையும் நியாயத்தை பாதுகாக்கும் நோக்கத்தையும் மேலோங்க வைத்துள்ளோம்.
எனவே, விசாரணை நடைபெறும் வரை எங்கள் அணி போட்டியில் பங்கேற்க முடியாது” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, 15 வயதான ஒரு இளம் ரக்பி வீரர் மற்றும் மூத்த வீரர்கள் சிலர் இடையே ஏற்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம், பாடசாலை ரக்பி சமூகம் முழுவதும் கவலையையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.