350 கிலோ கஞ்சா பொதிகள் காங்கேசன்துறையில் மீட்பு!

350 கிலோ கஞ்சா பொதிகள்
காங்கேசன்துறையில் மீட்பு!

காங்கேசன்துறை கடற்கரையில் ஒதுங்கிய சுமார் 350 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரே இந்தக் கஞ்சா பொதிகளை இன்று நண்பகல் மீட்டனர்.

எனினும், இவற்றைக் கடத்த முயற்சித்தவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கஞ்சா பொதிகளை நீதிமன்றத்தில் பாரப்படுத்த காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.