24 வன்முறைக் கும்பல்கள் இலங்கையில் அட்டூழியம்! : உடன் கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

இலங்கையில் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 24 குழுக்கள் தொடர்ந்தும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரை நாட்டில் 36 குழுக்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் பல குழுக்கள் செயலற்ற நிலையில் உள்ளன எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளிலிருந்து செயற்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.