சடலங்கள் எரிப்புக்கு எதிர்ப்பு யாழில் இன்றும் ஆர்ப்பாட்டம்.

சடலங்கள் எரிப்புக்கு எதிர்ப்பு
யாழில் இன்றும் ஆர்ப்பாட்டம்.

கொரோனா வைரஸ் தொற்றால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “அரசே உமது பலத்தை சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்காதே”, “கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கைவைக்காதே”, “கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சடலங்களை நல்லடக்கத்துக்கு அனுமதியளித்திடு”, “இலங்கை அரசே ஜனாஸாக்களை எரிக்காதே”, “ஜனாஸாக்களில் இனவாதம் வேண்டாம்” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.