ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2021ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையை வழங்குவதற்கான அடிப்படை செயற்பாடுகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி 2205/17 இலக்கத்தின் கீழான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட விண்ணப்பத்திரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

இதே போன்று 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் 2020 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.