நாடாளுமன்றுக்குள் உலாவிய தொற்றாளர்கள்; அதிகாரிகள் 25 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை.

நாடாளுமன்றுக்குள் உலாவிய தொற்றாளர்கள்; அதிகாரிகள் 25 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சபாநாயகரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பொலிஸ் சாரதி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் என இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் சபாநாயகரின் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றுக்குச் சென்றுள்ளமை சி.சி.ரி.வி. காட்சிகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்புபட்ட 25 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.