கொரோனாச் சாவு 204 ஆக அதிகரிப்பு.

கொரோனாச் சாவு 204 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்றிரவு அறிவித்துள்ளார்.

நான்கு ஆண்களும், பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 191 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.