தனது பணத்தை வறியோருக்கு கொடுத்து கொடை வள்ளலாக மாறும் ரஞ்சன் (வீடியோ)

திரைப்பட நடிகரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரருமான ரஞ்சன் ராமநாயக்க 40 லட்சம் பணத்தை மக்களிடம் பகிர்வதற்கு தீர்மானித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று (01) அவர் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயம் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாது , இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளாது அதனை திறைசேரிக்கே அனுப்பி வைத்ததாகவும், பின்னர் இந்த பணத்தை கொண்டு வறியவர்களுக்கு உதவ முடியும் என நண்பரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் நாடாளுமன்ற நிர்வாகத்திடம் தம்மால் திருப்பி அனுப்பிய பணத்தை மீளத் தருமாறு கோரி பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

வறுமையில் வாடும் மக்களுக்கு இந்த பணத்தை தாம் வழங்க உள்ளதாகவும், உண்மையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணத்தேவை உண்டா என்பது குறித்து கண்காணிக்கப்பட்ட பின்னரே பணம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாற்பது லட்சம் ரூபா பணம் தற்போது கிடைத்துள்ளதாகவும் அதை இவ்வாறு பகிர்ந்தளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் அலைவரிசை மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் பணம் தனக்கு மாதாந்தம் 2 – 3 லட்சம் பணம் கிடைப்பதாகவும், அவற்றையும் கூட வறிய மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நல்ல எண்ணத்துடன் இந்த பண கொடை வழங்கப்படுவதாகவும், யாரையும் இழிவுபடுத்துவது தமது நோக்கமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னரும் தான் தொடர்ந்து உதவி வந்ததாகவும் , அவை சரியானவர்களிடம் போய் சேராததை கண்டு கொண்டதாகவும் , சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு சிலர் தன்னை திட்டி தீர்த்ததாகவும் தெரிவித்துள்ள ரஞ்சன், தான் இதை தொடர்ந்து செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பணம் பெற்றுக்கொள்வோரை விளம்பரப்படுத்த போவதில்லை எனவும் அந்த விபரங்கள் இரகசியமாக பேணப்படும் எனவும் , தாம் திருமணம் முடிக்கவில்லை எனவும் மனைவி, பிள்ளைகள், ஆடம்பர செலவுகள் எதுவும் கிடையாது என்பதனால் பெருந்தொகை பணத்தை சேமித்து வைத்திருப்பதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் அரசு தந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாடகை வீட்டில் வாழ்வதாகவும் , வாடகை வாகனமொன்றையே பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படைகளில் இருந்து பாதிப்புக்குள்ளானோர், வறிய கலைஞர்கள் உள்ளிட்ட பொது மக்கள் என அனைவருக்கும் உதவுவதற்கு தாம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குஷான் திலகரட்ன என்ற தனது செயலாரை தொடர்பு கொண்டு பணத் தேவை பற்றி அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணத் தேவை உடையவர்கள் 0773624927 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.