பெரியமுல்லவில் எஸ்.எல்.டி.பி டிப்போ ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று.

நீர் கொழும்பு பெரியமுல்லவில் உள்ள எஸ்.எல்.டி.பி டிப்போ ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நீர்கொழும்பு டிப்போவின் 15 ஊழியர்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று
நீர்கொழும்பு தலைமை பொது பரிசோதகர் என்.கே.யூ.கே குணரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு கனல் வீதியில் உள்ள ஒலென்ரோ ஹோட்டலின்
ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதும், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மற்ற இரண்டு ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

இதன்படி நீர்கொழும்பு மாநகர சபை எல்லைகளிலிருந்து பதிவான மொத்த கோவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 336 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.