ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்குமாறு குறுஞ்செய்தி அனுப்பினாராம் மாவை

“நடந்து முடிந்த யாழ். மாநகர சபையின் மேயர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறுஞ்செய்தி மூலம் ஆதரவு கோரியிருந்தார்.”

– இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுத்த முடிவின் காரணமாக ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.