கோட்டா அரசை மண்கவ்வச் செய்ய பேச்சுக்குத் தயார் என ஐ.தே.க. பகிரங்க அறிவிப்பு

கோட்டா அரசை மண்கவ்வச் செய்ய

சஜித் – ரணில் அணிகள்
ஒன்றிணையும் அறிகுறி

பேச்சுக்குத் தயார் என ஐ.தே.க. பகிரங்க அறிவிப்பு

எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘பொய்களைத் தோற்கடித்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’ என்ற தொனிப்பொருளில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் குறித்து, ‘பொய்களைத் தோற்கடித்து, ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’ என்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதன்போது, நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு எதிர்கால தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து செயற்படுவதன் சாத்தியங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன எனவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.