முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு!

முகக்கவசம் அணியாதவர்களுக்கு
எதிராக நீதிமன்ற வழக்கு!

முகக்கவசம அணியாதவர்களை கைது செய்து வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக அவர்களை பிசிஆர் மற்றும் உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிஸாரினால் 300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுளளது.
அவதானம் உறவுகளே
கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்குமாறு சுகாதார பிரிவு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

எனினும் சிலர் குறித்த ஆலோசனைகளை கடைப்பிடிக்காததால் அவ்வாறான நபர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, கொவிட் இரண்டாவது அலை ஆரம்பத்தில் இருந்து இதுவரை சமூக இடைவௌியை பேணாத மற்றும் முகக்கவசம் அணியாத 2,172 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.