வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவருக்கு கொரணா தொற்று.

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவருடன் தொடர்புகளை பேணிய சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் முன்னெடுக்கப்பட்ட அன்ரியன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

எனினும் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவருடன் வவுனியாவில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 148 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.