வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் எவருக்கும் தொற்றில்லை.

ஆடைத்தொழிற்சாலையில் எவருக்கும் தொற்று இல்லை.

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலில் உண்மைத்தன்மை இல்லை என்று சுகாதாரபிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நேற்றயதினம் வெளிவந்த பிசிஆர் முடிவுகளின் அடிப்படையில் வவுனியாவை சேர்ந்த 16 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. எனினும் அவர்களில் 3 பேர் வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியிருந்தது.

எனினும் வவுனியா ஆடைத்தொழிற்சாலைகளை சேர்ந்த எவருக்கும் தொற்று இல்லை என்றும் குறித்த 16 பேரும் வவுனியா நகர வியாபாரநிலையங்களை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரபிரிவினர் தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.