பெருந்தொகையான போதைப்பொருள் ஹெரோயின் பணம் மீட்பு.

2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள், பணம் பொரளையில் மீட்பு

பொரளைப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவனைப்பின் போது 2கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளும் ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொரளை சிரிசய உயன மாடிவீட்டுப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு அது தொடர்பில் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 1,638கிராம் போதைப்பொருளும் 6,000,00ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவரிடம் விசாரணை செய்ததையடுத்து மேற்படி வீட்டுத் தொகுதியில் மூடி வைக்கப்பட்டிருந்த பாரிய போதைப்பொருள் வரத்தகர் ஒருவரின் வீட்டை சோதனை செய்யும் போது அங்கு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த மேற்படி போதைப்பொருளும் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.