போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய பொலிஸ் பரிசோதகர் வசமாக சிக்கினார்

போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் 43 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து சந்தேகத்துக்கிடமான 5 கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.