கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு.

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஊர் மக்கள் செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஏறி, ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு.

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஊர் மக்கள் செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஏறி, ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

தனது முதல் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவில் முடித்து கொண்டு சொந்த கிராமத்திற்கு வருகை தந்த  கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சேலம் சின்னப்பம்பட்டி ஊர் மக்கள் செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஏறி, ஊர்வலமாக அழைத்து வந்தனர். மக்கள் புடைசூழ நடராஜனை ஊர்மக்கள் அழைத்து வந்தனர். 

கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளதால் கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  அதேபோல் ஊர்வலமாக அவரை அழைத்துவர வேண்டாம் என்றும் ஊர்மக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.