அனைத்து சர்வதேச விமான சேவை நிறுவனங்களும் இலங்கைக்கு இயக்க தயார்.

அனைத்து சர்வதேச விமான சேவை நிறுவனங்களும் இலங்கைக்கு இயக்க தயார்.பிரசன்ன ரணதுங்க.

கொவிட் 19 தொற்றுநோய்க்கு முன்னர் இலங்கையில் இயக்கப்பட்ட அனைத்து சர்வதேச விமான சேவை நிறுவனங்களும் அதன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட பின்னர் நேற்று மட்டும் 15 வணிக விமானங்கள் (commercial flights) இயக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தொற்று நோய்க்கு தொற்றுநோய்க்கு முன்பு, சுமார் 35 சர்வதேச விமான நிறுவனங்கள் நமது நாட்டிற்கு விமானங்களை இயக்கியுள்ளன. இந்த விமான நிறுவனங்கள் அனைத்தும் எங்களுடன் வணிக விமானங்களை (commercial flights) மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன. அத்துடன் ஒரு நாளைக்கு சுமார் 80 விமானங்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயக்கினோம். இவ்வாறான நிலையில் மீள இந்த நிலைக்கு சில நாட்கள் செல்லும். ஆனால் அது படிப்படியாக நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும் ஆறு அல்லது ஏழு மாத காலத்திற்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகை சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, “என்று அவர் கூறினார்.

கொவிட் தொற்றுக்கு முன்னர் செய்ததை விட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்று அவர் கூறினார். உத்தியோகபூர்வமாக நாட்டை சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்த பின்னர் கருத்துதெரிவித்த அமைச்சர் நாட்டை மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பது ஒரு சவால் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.