21 நாட்களில் 12,615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

21 நாட்களில் 12,615 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று.

கொழும்பில் மட்டும் 3,543 பேர் பாதிப்பு

இலங்கையில் கடந்துள்ள 21 நாட்களில் மாத்திரம் 12 ஆயிரத்து 615 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 543 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 440 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 960 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் 114 பேருக்கும், பதுளையில் 22 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.