பலியான 4 மீனவர்களின் சடலங்களும் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

பலியான 4 மீனவர்களின் சடலங்களும் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

இலங்கைக் கடற்படையினரின் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்கள் அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கடற்பரப்பில் வைத்து இன்று முற்பகலில் இந்த உடல்கள் இந்தியக் கடலோரக் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

கடந்த 18ஆம் திகதி இரவு இலங்கைக் கடற்படையின் அதிவேக ரோந்துக் கப்பலுடன் இந்திய மீனவர்கள் பயணித்த படகு மோதியதில் மூழ்கிய படகில் இருந்து 4 மீனவர்களது உடல்களும் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.