உக்கிளாங்குளம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து நகை,பணம் திருட்டு.

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து நகை மற்றும்பணம் திருடிச்செல்ப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெரிய வருகையில் நேற்றுமுன்தினம் தமது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்கரைப்பவுண் நகை என்பன திருடப்பட்டிருந்ததை அவதானித்தனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு போலிசாருக்கு தகவல் வழங்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவனியாவில் கடந்த சில நாட்களாக நகை திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.