பொன்னியின் செல்வன் வெப் தொடருக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகும் வெப் தொடருக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார்.

இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது.

தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதை அஜய் பிரதீப் இயக்க உள்ளார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார்.

இப்படத்திற்கு சாபு சிரில் கலை இயக்குநராகப் பணியாற்றவிருக்கிறார். ஆண்டனி எடிட்டிங் செய்யவிருக்கிறார். விஷூவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஓவியங்களை பாகுபலி புகழ் விஸ்வநாதன் ஆனந்த் மேற்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.