இலங்கை முழுவதும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில் விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 427 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்துகளில் 90 பேர் பலத்த காயமடைந்துள்ளதுடன் 189 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.