கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பெப்ரவரி முதல் வடக்கு மக்களுக்கு.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகள்
பெப்ரவரி முதல் வடக்கு மக்களுக்கு.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“நாளை ஆறு இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளன. முதற்கட்டமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுமக்களுக்குக் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.