காலை 9.17 மணியளவில் திடீரென நிலநடுக்கம்.

டெல்லியின் மேற்கு பகுதியில் இன்று காலை 9.17 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  காலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  எனினும், இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.