இலங்கையில் தடுப்பூசி போடும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra – Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து
இராணுவத்தில் முதலாவது தடுப்பூசி மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் மேல்மாகாணத்தில் 6 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறுகின்றது.

கொவிட் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.