கிளிநொச்சி மாவட்டத்தில் 1200 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியிலும் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் 1200 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டோருக்கு குறித்த தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் கொவிட் 19 தடுப்பு ஊசிகள் வழங்கப்படுவதாகவும், 1200 பேருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave A Reply

Your email address will not be published.