பாரிய விபத்தினை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்.

பாரிய விபத்தினை தடுத்து நிறுத்திய இராணுவத்தினரின் துணிகர செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டு.

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் ஆசை பிள்ளை ஏற்றம் எனும் இடத்தில் ரயில் கடவை ஒன்றினை கடப்பதற்கு கனரக வாகனம் ஒன்று முயன்றுள்ளது.

புகையிரத சமிஞ்சை ஒலி, ஒளி போடப்பட்டிருந்த போதிலும் கூட அதனை பொருட்படுத்தாது கடவையை கடக்க முயன்ற போது அதிவேக ரயில் வந்துள்ளது.

இதன்போது கடவையை கடக்க முயன்ற கனரக வாகனம், செயலிழந்து நடு கடவையில் நின்றுள்ளது. இதன்போது அங்கிருந்த சில இளைஞர்கள் ரயில் நெருங்குவதற்கு முன்னர், வாகனத்தை கடவையை விட்டு தள்ள முற்பட்டும், முயற்சி பயனலிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ரயில் நெருங்கி வருவதை அவதானித்த அந்த இளைஞர்கள், உடனே தமது மேலாடையை கழட்டி ரயிலை நிறுத்த கோரியுள்ளனர்.

ஆனாலும் அதிவேக ரயில் என்பதால் வேகத்தை கட்டுபடுத்த தாமதமானது. எனினும் அங்கு ஏ9 வீதி ஊடாக வருகை தந்த இராணுவத்தினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து தமது உயிரையும் துட்சமாக எண்ணி வாகனத்தை தள்ளி பாரிய சேதத்தில் இருந்து பாதுகாத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.