முல்லைத்தீவு மாவட்ட செயலக சுதந்திர தின வைபவம்!

முல்லைத்தீவு மாவட்ட செயலக சுதந்திர தின வைபவம்!

இலங்கை ஐனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தினத்தையொட்டி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தல் சுதந்திர தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(04) காலை 8.00மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலக வளாகத்தில மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக சுகாதார விதிமுறைகளுக்கமைய எளிமையான முறையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.