இவ்வருட ஐபில் ஏல விற்பனை தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இம்மாதம் 18ம் திகதி இடம்பெறவிருக்கும் ஐபில் ஏல விற்பனை தொடர்பான பல்வேறு தகவல்கள் இன்றைய தினம் வெளியாகி இருக்கிறது.

இம்முறை ஐபில் போட்டிகளில் பங்குபெற 283 வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் 31 பேர் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியின் முன்னாள் வீரர்கள் யாதவ் & ஹர்பஜன் சிங்குக்கு 2 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஸ்டிவ் ஸ்மித்,கிளன் மக்ஸ்வெல்.கொலின் இங்கிராம், மார்க் வூட் மற்றும் மொயின் அலி ஆகியோருக்கும் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜீன் டெண்டுல்கர் முதல் முறையாக ஐபில் ஏலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார். இவருக்கு அடிப்படை விலையாக 20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.