ரஜினிகாந்த் இந்த தேர்தலில் நூறு சதவிகிதம் கட்சி தொடங்கமாட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் நூறு சதவிகிதம் கட்சி தொடங்கி போட்டியிடவில்லை என்று ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் சுதாகர், நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலமாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. தெரிவிக்கவும் மாட்டார் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

லதாரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக வரும் செய்திகளும் உண்மையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அர்ஜூன மூர்த்தி கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் என்றால், அது அவர் விருப்பம். அவருக்கும் ரஜினி மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.