6 வயது மகனை நரபலி கொடுத்த தாய்

கேரளா பாலக்காட்டு மாவட்டத்தில் சுலைமான் ஷாகிதாவின் மூன்றாவது ஆறு வயது மகனை கடவுளுக்கு பலி கொடுத்துள்ளார் ஷாகிதா என்ற தாய்.

ஷாகிதாவின் கணவர் சுலைமான் முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். தற்போது சுலைமான் கேரளாவில் ஓட்டுனராக பணியாற்றுகிறார். ஷாகிதா மதப்பள்ளியில் ஆசிரியையாகவும் இருந்துள்ளார். தற்போது நான்காவது குழந்தையை கற்பம் தரித்த நிலையில் தனது ஆறு வயது மகனின் இருகைகளையும் கட்டி , வீட்டு குளியலறையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்பு காவல் நிலையத்திற்கு அதி காலை நான்கு மணிக்கு தொலைபேசி ஊடாக தான் தனது மகனது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். காவலர்கள் வந்த பின்புதான் பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த சுலைமானும் , இரு குழந்தைகளும் இந்த கொடும் செயலை அறிந்துள்ளனர்.

ஷாகிதா தன் மகனை கடவுளுக்கு பலி கொடுத்ததாக காவலர்களிடம் தெரிவித்துள்ளார் .

கொடூரமாக கொலை செய்த தாய் ஷாகிதா , கடவுளின் கட்டளையை நிறவேற்றியதாக கூறியுள்ளார் . போலிஸ் வழக்கு பதிந்து அவரை கைது செய்துள்ள போலீசார் இக் கொலையில் கணவருக்கு பங்கு உண்டா என்ற நிலையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.