ஊர்காவற்றுறையைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணே யாழில் முதலாவது கொரோனாச் சாவு!

கொரோனா வைரஸ் தொற்று நோயால் யாழ்ப்பாணத்தில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

அவருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியபட்ட நிலையில், அநுராதபுரம் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அவரது உடல்நிலை கடுமையானதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் மீளவும் மாற்றப்பட்டார். அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்..

இந்தநிலையில், அவர் சிகிச்சை பயனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார்.

அவரது சடலம் கொரோனாச் சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு அமைய நேற்று தகனம் செய்யப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா மரணம் இதுவாகும். ஏற்கனவே வவுனியாவில் ஒருவரும், மன்னாரில் இருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் முதலாவது நோயாளி நேற்று உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.