அடக்கம் செய்ய முடியும் என்று பிரதமர் மஹிந்த கூறவில்லை- ஆளும் கட்சி எம்.பி. கோகிலா கூறுகின்றார்

“கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றே பிரதமர் கூறினார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.