பொத்துவில் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

பொத்துவில் பிரதேச சபையினுடைய 2021ம் ஆண்டுக்கான பாதீடு இருமுறை தோற்கடிக்கப்பட்டதையடுத்து இன்று நடைபெற்ற புதிய தவிசாளர் தெரிவின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து போட்டியிட்ட கௌரவ MH. அப்துல் றஹீம் புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

அ.இ.ம.கா இனுடைய தேசியத்தலைமை கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பா.உ. கௌரவ SMM முஷாரப் அவர்களின் அயராத முயற்சியாலும் ஏனைய கௌரவ சபை உறுப்பினர்களின் கட்சி பாகுபாடற்ற வலிமையான ஒத்துழைப்புக்களாலும் இன்று பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது.

இன்றைய தெரிவின் போது புதிய தவிசாளருக்கு ஆதரவாக அ.இ.ம.கா. இன் கௌரவ உறுப்பினர்களான முன்னாள் பிரதி தவிசாளர் AMM. தாஜூதீன், NH. முனாஸ், AP. சதக்கத்துல்லாஹ், ஆஷியா பீவி, ஐ.தே.க. இன் கௌரவ உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான MSM. மர்சூக், த.தே.கூ இன் கௌரவ உறுப்பினரும் பிரதி தவிசாளருமான P. பார்த்தீபன், ஶ்ரீ.ல.சு.க. இன் கௌரவ உறுப்பினர் M. அன்வர் சதாத், MH. ஜமாஹிம், ஜூனைதா உம்மா, அ.இ.த.கா. இன் கௌரவ உறுப்பினர் N. சசிதரன், சுயேற்சை குழு கௌரவ உறுப்பினர் S. பக்குறுதீன், ம.வி.மு. இன் கௌரவ உறுப்பினர் ஆதம் சலீம் ஆகிய 13 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தார்கள்.

தமிழ் மிரர் செய்தியாளர் : Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.