இலங்கையில் கொரோனா காவு 390 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா காவு 390 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சாவடைந்துள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

3 பெண்களும், 3 ஆண்களுமே கொரோனா உயிரிழப்புப் பட்டியலில் இறுதியாகப் பதிவாகியுள்ளனர்.

இதன்படி பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர், அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர், வத்துபிட்டிவல வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவர், அங்கொட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கண்டிப் பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நாராங்கொட பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர், அங்கொட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.