இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 75,209 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் பதிவான கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐ கடந்துள்ளது.

இன்று இதுவரை 357 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 75,209 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 865 கோவிட்-19 தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,696 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 6,123 நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று சந்தேகத்தில் 598 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.