விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கொழும்பு, ஹவ்லொக் வீதியை மறித்து போராட்டம் நடத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் செய்யித் ராத் அல் ஹுசேனின் இலங்கை விஜயத்தின்போது அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.