இலங்கையில் 77 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை!

இலங்கையில் 77 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை!

இலங்கையில் இன்றும் 756 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 1018 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றில் இருந்து இதுவரை 70 ஆயிரத்து 429 பேர் குணமடைந்துள்ளதுடன், 6 ஆயிரத்து 318 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.