காரைநகரில் எலறா கடற்படைத் தளத்துக்குக் காணி சுவீகரிப்பு!

காரைநகரில் எலறா கடற்படைத் தளத்துக்குக் காணி சுவீகரிப்பு!

யாழ்.காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான 8 பரப்பு அளவு கொண்ட காணி, கடற்படை முகாம் அமைப்பதற்காக நாளை புதன்கிழமை அளவீடு செய்யப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

எலறா என்கின்ற கடற்படைத் தளம் அமைக்கும் நோக்கிலேயே குறித்த காணி அளவீடு நாளை காலை 9 மணியளவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அண்மையில் தனியாருக்குச் சொந்தமான வேலணைப் பகுதியில் உள்ள காணிகள் கடற்படையினரின் தேவைக்குச் சுவீகரிக்கும் நோக்கில் அளவீடுகள் மேற்கொள்வதற்கு முனைந்தபோது, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.

இந்தநிலையிலேயே காரைநகரில் பாடசாலைக்குச் சொந்தமான காணியை சுவீகரிக்கும் நோக்கில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.